ஆவடி மாநகராட்சி

ஆவடி மாநகராட்சி இந்தியாவின் தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆவடி நகராட்சியின் பகுதிகளை விரிவாக்கம் செய்து தமிழ்நாட்டின் 15வதாக உருவாக்கப்பட்ட மாநகராட்சியாகும். 17 சூன் 2019 அன்று தமிழ்நாடு அரசு இதற்கான அவசர சட்டம் பிறப்பித்து அதனை அரசிதழிலும் வெளியிட்டுள்ளது.[1] [2]

ஆவடி மாநகராட்சி
வகை
வகை
வரலாறு
தோற்றுவிப்பு17 சூன் 2019
தலைமை
மேயர்
ஜி. உதயகுமார், திமுக
4 மார்ச் 2022
கட்டமைப்பு
உறுப்பினர்கள்48
அரசியல் குழுக்கள்
திமுக கூட்டணி 43
அதிமுக 4
சுயேச்சைகள் 1

ஆவடி மாநகராட்சிப் பகுதிகள்தொகு

புதிதாக நிறுவப்படவுள்ள ஆவடி மாநகராட்சி, தற்போது உள்ள ஆவடி நகராட்சியின் 48 வார்டுகளும் மற்றும் அதற்குட்பட்ட திருமுல்லைவாசல், கோவில்பதாகை, மிட்டனமல்லி, பட்டாபிராம், பருத்திப்பட்டு, வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதிகள் அடங்கும்[3][4].

எதிர்காலத்தில் திருவேற்காடு, பூந்தமல்லி, திருநின்றவூர், வானகரம், நெமிலிச்சேரி போன்ற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள சில பகுதிகளையும் மக்கள் கருத்து கேட்ட பிறகு ஆவடி மாநகராட்சி உடன் இணைப்பதற்கு வாய்ப்பு உள்ளது.

ஆவடி மாநகராட்சி தேர்தல், 2022தொகு

Script error: No such module "main". 2022-ஆம் ஆண்டில் ஆவடி மாநகராட்சியின் 48 மாமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க முதன்முறையாக தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் திமுக கூட்டணி 43 வார்டுகளையும், அதிமுக 4 வார்டுகளையும் மற்றும் சுயேச்சை 1 வார்டையும் கைப்பற்றியது. மேயர் தேர்தலில் திமுகவின் ஜி. உதயகுமார் தேர்வு செய்யப்பட்டார். [5]

இதனையும் காண்கதொகு

மேற்கோள்கள்தொகு

வெளி இணைப்புகள்தொகு

வார்ப்புரு:திருவள்ளூர் மாவட்டம்

"https://ta.bharatpedia.org/index.php?title=ஆவடி_மாநகராட்சி&oldid=16320" இருந்து மீள்விக்கப்பட்டது