அச்சல் குமார் ஜோதி

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Infobox Officeholder அச்சல் குமார் ஜோதி (Achal Kumar Jyoti, பிறப்பு: 23 சனவரி 1953) என்பவர் இந்திய ஆட்சிப் பணி அதிகாரி ஆவார். 1975-ம் ஆண்டில் குஜராத் மாநிலத்தில் இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாக பணியாற்றத் துவங்கி பல்வேறு பொறுப்புகளை வகித்து கடந்த 2013-ம் ஆண்டு ஜனவரி மாதம் ஓய்வு பெற்றார். 2015 மே 13 இல் இவர் மூன்று இந்தியத் தேர்தல் ஆணையர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டார்.[1][2]

பணி விவரம்[தொகு | மூலத்தைத் தொகு]

அச்சல் குமார் ஜோதி குஜராத் தலைமைச் செயலாளராக 2013-ஆம் ஆண்டு வரை பணியாற்றினார்.[1] அவர் 1999 முதல் 2004 வரை, கண்ட்லா துறைமுக அறக்கட்டளை தலைவராகவும், சர்தார் சரோவர் நர்மதா நிகாம் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனராகவும் பொறுப்பு வகித்தார். 2013-இல் தலைமைச் செயலர் பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் குஜராத் மாநில லஞ்ச ஒழிப்புத்துறை ஆணையராகப் பதவி அமர்த்தப்பட்டார்.[2]

மேற்கோள்[தொகு | மூலத்தைத் தொகு]

வார்ப்புரு:Persondata


வார்ப்புரு:India-bio-stub

"https://ta.bharatpedia.org/index.php?title=அச்சல்_குமார்_ஜோதி&oldid=1130" இருந்து மீள்விக்கப்பட்டது