இந்தியாவின் தேசிய மனித உரிமை ஆணையம்
இந்தியாவின் தேசிய மனித உரிமை ஆணையம் ஒரு தன்னாட்சி பெற்ற இந்திய அரசாங்கத்தின் ஆணையமாகும். அக்டோபர் 12, 1993[1] இல் மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டம், 1993[2], (டி பி எச் ஆர் ஏ) இன் கீழ் இவ்வாணையம் நிலைநாட்டப்பெற்றது. பாரிசில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் அவை சார்பில் மனித உரிமை பாதுகாப்பு ஆணைய கூட்டத்தில் எடுக்கப்பெற்ற தீமானத்தின் அடிப்படையில் இவ்வாணையம் இந்தியாவில் உருவாக்கப்பட்டது,
செயற்பாடுகள்[தொகு | மூலத்தைத் தொகு]
புகார்[தொகு | மூலத்தைத் தொகு]
புகார்கள் அனுப்புவது[தொகு | மூலத்தைத் தொகு]
தேசிய மனித உரிமை ஆணையத்திற்கு அனுப்பப்படும் புகார்கள் ஆங்கிலம் அல்லது இந்தியிலோ எட்டவாது அட்டவணையில் [3] கூறப்பட்டுள்ளபடி மாநில மொழியான தமிழிலும் இருத்தல் வேண்டும். இந்த மொழிகளில் அனுப்படும் புகார்களை ஆணையம் ஏற்றுக் கொள்ளுதல் வேண்டும். வார்ப்புரு:Jimboquote
புகார் மனுவில் குறிப்பிட வேண்டியவை[தொகு | மூலத்தைத் தொகு]
- புகார் மனு கீழ்கண்ட விவரங்கள் அடங்கியவனவாக இருத்தல் வேண்டும்;-[4]
- குறிப்பு-;ஒருவர் மாநில மனித உரிமை அல்லது தேசிய மனித உரிமை ஆணையம் என்று ஏதாவதொரு ஆணையத்தில் புகார் செய்யலாம். மாநில ஆணையத்தில் புகார் செய்தபின் தேசிய ஆணையம் அவ்வழக்கை மேற்கொள்ளாது. தேசிய ஆணையத்தில் புகார் செய்தபின் மாநில ஆணையம் அப்புகாரை மேற்கொள்ளாது. (ஒரே நேரத்தில் ஒரு வழக்கை இரு ஆணையங்கள் மேற்கொள்ளாது). புகார் பெற்றபின் அதற்குரிய புகார் பெற்றதற்கான இரசீது கொடுக்கப்படும்.
ஏற்கப்படாத புகார்கள்[தொகு | மூலத்தைத் தொகு]
கீழ்க்கண்டத் தன்மை கொண்ட புகார்கள் எடுத்த எடுப்பிலேயே தள்ளுபடி செய்திடலாம்.[3]
புகார்களைப் பெறுதல்[தொகு | மூலத்தைத் தொகு]
ஆய்வு[தொகு | மூலத்தைத் தொகு]
ஒவ்வொரு புகாரும் அதன் தன்மைக் குறித்து ஆய்வு[3] செய்யப்பட்டு அதன் படி வகைப்படுத்தப்படுகின்றது. அவற்றை ஒழுங்குபடுத்தியபின் அவற்றை தன்மைக்கேற்ப வழக்குப் பதிவு செய்து அதற்கு பதிவெண் வழங்கப்படுகின்றது.
காலவரை[தொகு | மூலத்தைத் தொகு]
புகார்ரைப்பதிவு செய்த நாளிலிருந்து 7 நாட்களுக்கு மிகாமல்[3] ஆணையத்தின் முன் வைக்கவேண்டும். அவசரத் தேவையாக இருப்பின் அவற்றின் அவசரத்தன்மைக் கருதி 24 மணி நேரத்திற்குள்[3] தேசிய அல்லது மாநில மனித உரிமை ஆணையத்தின் முன் வைக்கப்படவேண்டும் என்று வரையறை செய்யப்பட்டுள்ளது.
ஆக்கமைவு மற்றும் நியமனம்[தொகு | மூலத்தைத் தொகு]
வார்ப்புரு:இற்றை டி பி எச் ஆர் ஏ பிரிவு 3 மற்றும் 4 ன் கீழ் வரையறுத்துள்ளதின்படி இவ்வாணையத்தின் நியமனங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேசிய மனித உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் நியமனங்கள் அதன் சிறப்புக்குழுப் பரிந்துறையின்படி இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகின்றனர்.
வ.எண் | குழுஉறுப்பினர் | பொறுப்பு |
---|---|---|
1 | பிரதமர் | தலைமையர் |
2 | மக்களவைத் தலைவர் | உறுப்பினர் |
3 | இந்திய உள் துறை அமைச்சர் | உறுப்பினர் |
4 | மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் | உறுப்பினர் |
5 | மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் | உறுப்பினர் |
6 | மாநிலங்களவைத் துணைத் தலைவர் | உறுப்பினர் |
வ.எண் | நியமனங்கள் | பொறுப்பு |
---|---|---|
1 | உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி | தலைமையர் |
2 | உச்ச நீதிமன்ற நீதிபதி | உறுப்பினர் |
3 | உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி | உறுப்பினர் |
4 | மனித உரிமை ஆர்வலர்கள் இருவர் | உறுப்பினர் |
வ.எண் | நியமனங்கள் | பொறுப்பு |
---|---|---|
1 | மாண்புமிகு நீதியரசர் எச். எல். தத்து | தலைமையர் |
2 | மாண்புமிகு நீதியரசர் திரு கோவிந்த் பிரசாத் மாத்தூர் | உறுப்பினர் |
3 | மாண்புமிகு நீதியரசர் திரு ஒய். பாஸ்கர ராவ் | உறுப்பினர் |
4 | திரு ஆர்.எஸ்.கல்கா | உறுப்பினர் |
5 | திரு பி.சி.சர்மா | உறுப்பினர் |
6 | திரு முகம்மது ஷபி குரேஷி (தலைமையர், தேசிய சிறுபான்மையினர் ஆணையம்) |
அலுவல் நிலை உறுப்பினர் |
7 | (தலைமையர்,
|
அலுவல் நிலை உறுப்பினர் |
8 | முனைவர் கிரிஜா வயாஸ் (தலைமையர்,
|
அலுவல் நிலை உறுப்பினர் |
தலைமை செயலாட்சி அலுவலர்கள் | ||
1 | திரு ஏ.கே. ஜெயின் | பொதுச் செயலர் |
2 | திரு சுனில்கிருஷ்ணா | காவல்துறை இயக்குநர் (புலனாய்வு) |
3 | திரு ஏ,கே கார்க் | பதிவர் (சட்டம்) |
'
'
ஆணையம் அமைந்துள்ள இடம்[தொகு | மூலத்தைத் தொகு]
தேசிய மனித உரிமை ஆணையம் புதுதில்லியில் காப்பர் நிக்கஸ் மார்க், அருகில் பரித்கோட் இல்லத்தில் (அவுஸ்) இயங்குகின்றது. ஆணையத்தை தொலைபேசியில் ஆணுக 011-23385368, எண்ணும், புகார் செய்ய கைபேசி எண்,9810298900 அளிக்கப்பட்டுள்ளன. புகார்கள் 24 மணி நேரமும் பெறப்படும்.
புகாருக்கு இன்னுமோரு தனி தொலைநகல் எண் 011-23386521 / ஆட்சியர்களை அணுக 23384863,/ புலனாய்வுக்கு 23382734 அளிக்கப்பட்டுள்ளன. மின்னஞ்சல் [email protected] (பொது) / புகாருக்கு [email protected] மற்றும் ஆய்வு பிரிவிற்காக [email protected] அளிக்கப்பட்டுள்ளன.
செயல்பாடு[தொகு | மூலத்தைத் தொகு]
தேசிய மனித உரிமை ஆணையம் 2015 ஆம் ஆண்டு நெல்லையில் பள்ளிகளில் மாணவர்களின் நடவடிக்கை பற்றி மாவட்ட ஆட்சியருக்கு நோட்டீஸ் அனுப்பியது.[5]
இவற்றையும் பார்க்கவும்[தொகு | மூலத்தைத் தொகு]
மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]
- ↑ தேசிய மனித உரிமை ஆணையத்தின் துண்டு பிரசுரங்களின் பி டி எப்
- ↑ தேசிய மனித உரிமை ஆணையத்தின் சட்டத்தொகுப்பு பி டி எப்
- ↑ 3.0 3.1 3.2 3.3 3.4 பிழை காட்டு: செல்லாத
<ref>
குறிச்சொல்;புலமை
என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை - ↑ மகராஷ்டிரா மாநில மனித உரிமை ஆணையம்-புகார் குறித்து மனு செய்ய பரணிடப்பட்டது 2009-08-02 at the வந்தவழி இயந்திரம் பார்த்து பரணிடப்பட்ட நாள் 25-04-2009
- ↑ பள்ளி மாணவர்களிடையே ஜாதி பிரச்சினை: நெல்லை ஆட்சியருக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் தி இந்து தமிழ் 27 நவம்பர் 2015
வெளிப்புற இணைப்புக்கள்[தொகு | மூலத்தைத் தொகு]
வார்ப்புரு:இந்திய மனித உரிமை ஆணையங்கள் வார்ப்புரு:இந்திய ஆணையங்கள்