கலாசேத்திரா

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Infobox school கலாசேத்திரா (Kalakshetra) என்பது இந்தியக் கலையை, குறிப்பாக பரதநாட்டியம் மற்றும் இசையைப் போற்றி வளர்க்கும் பொருட்டு 1936 இல் ருக்மிணிதேவி அருண்டேலினால் ஆரம்பிக்கப்பட்ட ஒரு கவின் கலைக் கல்லூரியாகும். ஒரே ஒரு மாணவியுடன் ஆரம்பிக்கப்பட்ட இக்கலைக்கல்லூரியில் இன்று நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் உலகெங்கணும் இருந்து இங்கு தங்கி கலை பயில்கின்றார்கள். அருண்டேலின் வழிகாட்டலே கலாக்ஷேத்திராவின் வளர்ச்சிக்கு முக்கிய காரணியாக விளங்கியது.

1962 இலிருந்து கலாசேத்திரா சென்னையில் திருவான்மியூரில் புதிய வளாகத்தில் இயங்கத்தொடங்கியது.

1993 இல், இந்திய நாடாளுமன்றத்தினால் கொண்டுவரப்பட்ட ஒரு தீர்மானத்தின் படி கலாசேத்திரா இந்தியாவின் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிறுவனமாக அங்கீகரிக்கப்பட்டது[1].

வரலாறு[தொகு | மூலத்தைத் தொகு]

ருக்மிணி தேவி அருண்டேல்

கலாசேத்திரா 1936 ஆம் ஆண்டு ஜனவரி 6 இல் ருக்மிணி தேவி அருண்டேல் மற்றும் அவரது கணவர் ஜோர்ஜ் அருண்டேல் ஆகியோரினால் சென்னையில் அடையாறில் பிரம்மஞான சபையின் தோட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டது. கலாசேத்திராவின் முன்னேற்றத்துக்கு அன்னி பெசன்ட் அம்மையார், டாக்டர் ஜோர்ஜ் அருண்டேல், டாக்டர் ஜேம்ஸ் கசின்ஸ், டாக்டர் சி. பி. இராமசுவாமி ஐயர், ஸ்ரீசுப்பிரமணிய சாஸ்திரி போன்ற பெரியோர் உறுதுணையாக இருந்தனர்.

பின்னர் கலாசேத்திரா அறக்கட்டளையின் நிறுவனர்களான ருக்மிணி தேவி அருண்டேலும், அவரது கணவரும் , நன்கு அறியப்பட்ட தத்துவவியலாளருமான, ஜார்ஜ் அருண்டேலும் சிறந்த மாணவர்களை மட்டுமல்ல, குறிப்பிடத்தக்க ஆசிரியர்களையும் அழைத்து இங்கு பயிலும் மாணவர்களுக்கு பயிற்சி அளித்தனர். இசைக்கலைஞர்கள் மற்றும் நடனக்கலைஞர்கள் இந்த நிறுவனத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் அவர்கள் பல இசைக் கலைஞர்களை கௌரவித்துள்ளனர்.[2]

தலைசிறந்த இசைக்கலைஞர்கள் இங்கு கடமையாற்றியுள்ளனர். டைகர் வரதாச்சாரி, காரைக்குடி சாம்பசிவ ஐயர், மைசூர் வாசுதேவாச்சாரியார், பூதலூர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

பிப்ரவரி 29, 2004 அன்று, கலாசேத்திரா மற்றும் உலகின் பல பகுதிகளில், விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் திருவிழாக்கள் உட்பட ஆண்டு முழுவதும் கொண்டாட்டங்கள் அவரது 100 வது பிறந்த நாளைக் கொண்டாடும் விதமாக அமைந்தன.[3] பிப்ரவரி 29 அன்று, புதுதில்லியில் உள்ள லலித் கலா அருங்காட்சியகத்தில், அவரது வாழ்க்கை குறித்த புகைப்பட கண்காட்சி திறக்கப்பட்டது, ஜனாதிபதி ஏ.பி.ஜே. அப்துல் கலாம் முன்னாள் ஜனாதிபதி ராமசாமி வெங்கடராமனின் முன்னுரையுடன் சுனில் கோத்தாரி எழுதி தொகுத்த புகைப்பட-சுயசரிதை ஒன்றை வெளியிட்டார்.[4][5][6] 2016 ஆம் ஆண்டில், அதன் 80 வது ஆண்டைக் குறிக்கும் வகையில், கலாசேத்திரா அறக்கட்டளை, 'ருக்மிணி தேவி நினைவில்' என்கிற தலைப்பில் இசை மற்றும் நடனம் தொடர்பான திருவிழாவை நடத்தியது.[7] கலாசேத்திராவில், பரதநாட்டியம், கதகளி, வாய்ப்பாட்டு, வாத்திய இசை ஆகிய கவின் கலைகளில் நான்காண்டு கற்கை நெறியை முடிப்பவர்களுக்கு பட்டயச் சான்றிதழ் வழங்கப்படுகிறது. பொதுக் கல்வியும் வழங்கப்படுகிறது. தவிர, தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகள் சிறப்புப் பாடங்களாக போதிக்கப்படுகின்றன.

கலாசேத்திரா பாணி[தொகு | மூலத்தைத் தொகு]

மூன்று ஆண்டுகளாக பாண்டனல்லூர் பாணியைப் படித்த அவர், 1936 ஆம் ஆண்டில் ருக்மிணி தேவி அருண்டேலே, கலாசேத்திராவில் தனது சொந்த, பரதநாட்டிய பாணியை வளர்த்துக் கொள்ளத் தொடங்கினார். அவர் குழு நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்தினார் மற்றும் பல்வேறு பரதநாட்டியம் சார்ந்த பாலே நடன அமைப்பை ஏற்படுத்தினார்.

2011இல் ஹிலாரி கிளிண்டன் வருகையின் போது, கலாசேத்திராவில் பரதநாட்டிய நிகழ்ச்சி

கலாசேத்திரா பாணி அதன் கோண, நேரான, பாலே போன்ற இயக்கவியல் மற்றும் ரெக்காக்களைத் தவிர்ப்பது மற்றும் கைகால்களின் தடையற்ற வீசுதல் ஆகியவற்றால் குறிப்பிடப்படுகிறது.

கலாசேத்திராவின் தொடக்கத்திலிருந்து அவரது கூட்டாளியாக இருந்த சங்கரா மேனன் (1907-2007) கருத்துப்படி,[8] ருக்மிணி தேவி பரதநாட்டியத்தை ஒரு தூய கலை வடிவமாக உயர்த்தினார் என்றும், அதன் சமீபத்திய சர்ச்சைக்குரிய கடந்த காலத்திலிருந்த "ஆட்சேபகரமான கூறுகளை அகற்றுவதன் மூலம்" பரதநாட்டிய கலையை உயர்த்தியுள்ளார். பெரும்பாலும், சிருங்கார அசைவுகளில், சில இந்திய நடனக் கலைஞர் தஞ்சை பாலசரஸ்வதி (1918-1984) மற்றும் தமிழகத்தின் பாரம்பரிய இசை வேளாளர் கலாச்சாரத்தின் பிற பிரதிநிதிகளால் பகிரங்கமாக விமர்சிக்கப்பட்ட பாண்டனல்லூர் பாணியில் இருந்து வந்த இடுப்பு, கழுத்து, உதடு மற்றும் மார்பு அசைவுகள் போன்ற சிற்றின்பத்தை வெளிப்படுத்தும் உணர்ச்சி கூறுகள். "தூய்மையானது" என்று கருதப்படும் அளவுருக்கள் வெளியே சித்தரிக்கப்படக்கூடாது என்பதில் ருக்மிணி உறுதியாக இருந்தார் என்று குறிப்பிட்டுள்ளார்.

நாட்டியக் கலைஞர், பாலசரஸ்வதி, "புதுமையான யோசனைகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் பரதநாட்டியத்தை சுத்திகரிக்கும் முயற்சி, எரிந்த தங்கத்தின் மீது பளபளப்பைப் போடுவது அல்லது தாமரையை வரைவது போன்றது" என்று கூறினார். வழக்குரைஞரும், கர்நாடக கலைஞருமான ஈ.கிருஷ்ணா ஐயர் (1897-1968) ருக்மிணி தேவி பற்றி, "அவர் இந்தத் துறையில் நுழைவதற்கு முன்பு, கலை இறந்துவிட்டது, அல்லது அவர் நடனமாடத் தொடங்கியபோதுதான் அது ஒரு மறுமலர்ச்சியைக் கண்டது என்று சொல்லத் தேவையில்லை. அல்லது அதற்கு முன்பு இல்லாத புதிய முயற்சியை அவர் உருவாக்கியுள்ளார்" என்றும் கூறியுள்ளார்.

கலாக்ஷேத்திராவின் பழைய மாணவர்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

இக்கலைக் கல்லூரியில் பயின்று புகழ் பெற்றவர்கள் சிலர்: ராதா பேர்னியர், சாரதா ஹொஃப்மன், அடையாறு லட்சுமணன், வி. பி. தனஞ்சயன், இன்னும் பலர்[9].

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. "chennaibest.com". 2006-11-02 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2008-02-23 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  2. "Early years of Kalakshetra". www.tamilnation.org.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  3. "Another centenary celebration". தி இந்து. 27 January 2003. Archived from the original on 16 டிசம்பர் 2008. https://web.archive.org/web/20081216084110/http://www.hinduonnet.com/thehindu/mp/2003/01/27/stories/2003012700070300.htm. 
  4. "Her spirit still reigns". தி இந்து. 22 February 2004. Archived from the original on 3 ஜனவரி 2013. https://archive.today/20130103085459/http://www.hinduonnet.com/thehindu/mag/2004/02/22/stories/2004022200380500.htm. 
  5. "Time to celebrate". தி இந்து. 27 February 2003. Archived from the original on 29 ஆகஸ்ட் 2004. https://web.archive.org/web/20040829172954/http://www.hindu.com/thehindu/mp/2003/02/27/stories/2003022700330100.htm. 
  6. Centenary celebrations nartaki.com
  7. Santhanam, Radhika (25 February 2016). "Kalakshetra celebrates its 80th year". The Hindu. 2016-03-30 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  8. "Guru who inspired love (Sankara Menon’s centenary at Kalakshetra)". தி இந்து. 28 September 2007. Archived from the original on 5 நவம்பர் 2007. https://web.archive.org/web/20071105072622/http://www.hindu.com/fr/2007/09/28/stories/2007092850930100.htm. 
  9. "கலாக்ஷேத்திராவின் குறிப்பிடத்தக்க மாணவர்கள்". 2008-03-12 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2008-02-23 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>

வெளி இணைப்புகள்[தொகு | மூலத்தைத் தொகு]

வார்ப்புரு:வலைவாசல்

வார்ப்புரு:தமிழ்நாட்டில் கல்வி

"https://ta.bharatpedia.org/index.php?title=கலாசேத்திரா&oldid=17785" இருந்து மீள்விக்கப்பட்டது