கே. பராசரன்
கே. பராசரன் | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர் மாநிலங்களவை (நியமன உறுப்பினர்) | |
பதவியில் 29 ஜூன் 2012 – 28 ஜூன் 2018 | |
இந்திய அரசுத் தலைமை வழக்குரைஞர் | |
பதவியில் 9 ஆகத்து 1983 – 8 திசம்பர் 1989 | |
பிரதமர் | இந்திரா காந்தி ராஜீவ் காந்தி |
முன்னவர் | எல். என். சின்கா |
பின்வந்தவர் | சோலி சொராப்ஜி |
மத்திய அரசு வழக்கறிஞர் | |
பதவியில் 6 மார்ச் 1980 – 8 ஆகத்து 1983 | |
பிரதமர் | இந்திரா காந்தி |
முன்னவர் | சோலி சொராப்ஜி |
பின்வந்தவர் | மிலன் கே பானர்ஜி |
மாநில அரசுத் தலைமை வழக்குரைஞர் தமிழ்நாடு | |
பதவியில் 1976–1977 | |
முன்னவர் | கோவிந்த சுவாமிநாதன் |
பின்வந்தவர் | வி. பி. இராமன் |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | வார்ப்புரு:Birth date and age திருவரங்கம், தமிழ்நாடு, இந்தியா |
தேசியம் | இந்தியா |
வாழ்க்கை துணைவர்(கள்) | ஸ்ரீமதி சரோஜா |
பிள்ளைகள் | 2, மகள்கள் & 3 மகன்கள் மோகன் பராசரன் |
பெற்றோர் | ஆர். கேசவ ஐயங்கார் (தந்தை) சிறீமதி இரங்கநாயகி (தாயார்) |
கல்வி | பி. ஏ. (பொருளாதாரம்), மாநிலக் கல்லூரி, சென்னை பி. எல். சட்டக் கல்லூரி, சென்னை |
பணி | Script error: No such module "list". |
விருதுகள் | பத்ம பூசண் (2003), பத்ம விபூசண் (2011) |
கே. பராசரன் (K. Parasaran)(பிறப்பு: 1927) இந்தியாவின் முன்னோடி வழக்கறிஞர்களில் ஒருவர். அரசியல் அமைப்புச் சட்டம் தொடர்பான வழக்குகளில் வாதாடுவதில் திறமையானவர் எனப் பெயர் பெற்றவர். ராம ஜென்மபூமி வழக்கில் ராம் லல்லா அமைப்பு சார்பாக உச்ச நீதிமன்றத்தில் வாதாடி வெற்றி பெற்றவர்.[1]
வாழ்க்கை[தொகு | மூலத்தைத் தொகு]
பராசரனின் தந்தை கேசவ ஐயங்காரும் வழக்கறிஞர். இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவரான இவர் இலத்தீன், ஆங்கிலம், வடமொழி, தமிழ் ஆகிய மொழிகளில் புலமைபெற்றவர். தன்னுடைய தாயின் ஊரான திருவரங்கத்தில் பிறந்த பராசரன், திருவல்லிக்கேணி இந்து உயர்நிலைப்பள்ளி, மாநிலக் கல்லூரி, சென்னை சட்டக்கல்லூரி ஆகியவற்றில் பயின்றார். பி. ஏ. படிப்பில் வடமொழிப் பாடத்தில் நீதிபதி சி. வி. குமாரசாமி சாஸ்திரி பதக்கம், சட்டப்படிப்பில் இந்து சட்டத்தில் நீதிபதி வி. பாஷ்யம் ஐயங்கார் தங்கப்பதக்கம், பார் கவுன்சில் தேர்வில் நீதிபதி கே. எஸ். கிருஷ்ணசாமி ஐயங்கார் பதக்கம் ஆகியவற்றைப் பெற்றார்.
பணிகள்[தொகு | மூலத்தைத் தொகு]
1958இல் இந்திய உச்ச நீதிமன்ற வழக்கறிஞராகப் பதிவு செய்தார். 1971-ல் சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசின் வழக்கறிஞரானார். 1976-ல் தமிழ்நாடு அரசு தலைமை வழக்கறிஞரானார். 1977இல் அப்பதவியிலிருந்து விலகினார். 1980–1983 வரை மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல், 1983இல் அட்டானி ஜெனரல், 1986 மற்றும் 1989-ல் மீண்டும் அட்டர்னி ஜெனரல், 1984–1987 இல் இந்தியன் சொசைட்டி ஆப் கிரிமினாலஜியன் தலைவர், 1984–1987 பார் அசோசியேசன் தலைவர் ஆகிய பதவிகளை வகித்தார்.
1984இல் இந்தியக் குழுவின் தலைவராக நியூயார்க் சென்று, ஐ.நா. அவை மனித உரிமை ஆணையத்தில் இந்தியாவின் அறிக்கையை அளித்தார். போபால் விஷவாயுப் பிரச்சினை தொடர்பாக அமெரிக்க யூனியன் கார்பைடு நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்த நியமிக்கப்பட்ட இந்தியக் குழுவின் தலைவராகப் பொறுப்பு வகித்தார்.
விருதுகள்[தொகு | மூலத்தைத் தொகு]
- மதிப்புறு முனைவர் பட்டம் - அண்ணாமலைப் பல்கலைக்கழகம் (1989)[2]
- பத்ம பூசண் விருது-இந்திய அரசு (2003)[3]
- பத்ம விபூசண்-இந்திய அரசு (2011)[4]
- மூத்த குடிமகன் விருது (2019)[5]
- சிறீ நாரயண் குரு விருது (சுவராஜ்யா விருது)(2020)
மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]
- ↑ அயோத்தி வழக்கில் நின்று கொண்டே வாதாடிய 92 வயதான சட்ட நிபுணர் கே.பராசரன்
- ↑ தினமணி தீபாவளி மலர்,1999, தலைசிறந்த தமிழர்கள். பக்கம்95
- ↑ LEGAL LUMINARY – K. Parasaran
- ↑ "Parasaran, Vittal, Natarajan among Padma awardees" (in en-IN). The Hindu. 2011-01-26. https://www.thehindu.com/news/national/tamil-nadu/Parasaran-Vittal-Natarajan-among-Padma-awardees/article15533119.ece.
- ↑ "M Venkaiah Naidu presents Most Eminent Senior Citizen Award to K Parasaran | DD News". ddnews.gov.in. 2019-11-24 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
- Pages with script errors
- Pages containing cite templates with deprecated parameters
- Wikipedia pages using the awards parameter of Infobox officeholder
- 1927 பிறப்புகள்
- வாழும் நபர்கள்
- இந்திய அரசு அதிகாரிகள்
- இராமநாதபுரம் மாவட்ட நபர்கள்
- இந்திய அரசுத் தலைமை வழக்குரைஞர்கள்
- 20 ஆம் நூற்றாண்டு இந்திய வழக்கறிஞர்கள்
- தமிழ்நாடு தலைமை வழக்குரைஞர்கள்
- பத்ம விபூசண் விருது பெற்ற தமிழர்கள்
- பத்ம பூசண் விருது பெற்ற தமிழர்கள்
- மாநிலக் கல்லூரி மேனாள் மாணவர்கள்