தோன்சே ஆனந்த் பை

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Infobox person தோன்சே ஆனந்த் பை (Tonse Ananth Pai|T. A. Pai) (சுருக்கமாக: டி. ஏ. பை), (17 சனவரி 1922 – 29 மே 1981) சிண்டிகேட் வங்கியின் வளர்ச்சிக்கு துணை நின்றவரும், அதன் பொது மேலாளராகவும், தலைவராகவும் இருந்தவர். மணிபால் டி. ஏ. பை மேலாண்மைக் கல்வி நிறுவனத்தின் நிறுவுநரும் ஆவார்.[1][2]

வங்கிப் பணியில்[தொகு | மூலத்தைத் தொகு]

இவரது உறவினர் நிறுவிய சிண்டிகேட் வங்கியில் உயர் அதிகாரியாக பணிபுரிந்த டி. ஏ. பையை இந்திய அரசு 1970-இல் இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் தலைவராக நியமித்தது. பெங்களூரு இந்திய மேலாண்மை கழகத்தின் முதலாவது தலைவராக டி. ஏ. பை நியமிக்கப்பட்டார்.[3]

அரசியல்[தொகு | மூலத்தைத் தொகு]

1972-இல் மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டார். இந்திய அரசின் இரயில்வே, கனரகத் தொழில்கள், உருக்கு மற்றும் சுரங்கத் துறைகளின் அமைச்சராக செயல்பட்டவர். 1977-இல் உடுப்பி நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிலிருந்து இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

விருதுகள்[தொகு | மூலத்தைத் தொகு]

1972-இல் டி. ஏ. பைக்கு இந்திய அரசு பத்ம பூசண் விருது வழங்கி பாராட்டியது.[4] டி. ஏ. பைக்கு 1973-இல் கர்நாடகப் பல்கலைக்கழகமும், 1975-இல் ஆந்திரா பல்கலைக்கழகமும் கௌரவ டாக்டர் விருது வழங்கி பாராட்டியது.

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

"https://ta.bharatpedia.org/index.php?title=தோன்சே_ஆனந்த்_பை&oldid=2798" இருந்து மீள்விக்கப்பட்டது