ஆர். கே. பேட்டை வட்டம்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

ஆர். கே. பேட்டை வட்டம் அல்லது இராமகிருஷ்ணராஜா பேட்டை வட்டம் (R.K. Pet taluk) தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்தின் 9 வருவாய் வட்டங்களில் ஒன்றாகும். பள்ளிப்பட்டு வட்டத்தின் இருந்த ஆர். கே. பேட்டை ஊராட்சி ஒன்றியப் பகுதிகளைக் கொண்டு இப்புதிய வருவாய் வட்டத்தை 20 பிப்ரவரி 2019 அன்று, தமிழக முதல்வர் எடப்பாடி க. பழனிசாமி காணொலி வாயிலாக சென்னையிலிருந்து திறந்து வைத்தார்.[1][2][3] இதன் தலைமையிடம் இராமகிருஷ்ணராஜ் பேட்டை எனும் ஆர். கே. பேட்டை ஆகும்.

ஆர். கே. பேட்டை எனும் இராமகிருஷ்ணராஜா பேட்டை வருவாய் வட்டத்தில் ஆர். கே. பேட்டை, பாலாபுரம் மற்றும் எறும்பி என 3 குறுவட்டங்களும், 37 வருவாய் கிராமங்களும் உள்ளது.[4]

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

வார்ப்புரு:திருவள்ளூர் மாவட்டம்

"https://ta.bharatpedia.org/index.php?title=ஆர்._கே._பேட்டை_வட்டம்&oldid=14181" இருந்து மீள்விக்கப்பட்டது