இரவிக்குமார் (எழுத்தாளர்)

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Merge வார்ப்புரு:Infobox Indian politician இரவிக்குமார் (Ravikumar, பிறப்பு 1961) ஒரு புகழ் பெற்ற தமிழ் அறிவுசார் மற்றும் ஒரு சாதி-எதிர்ப்பு ஆர்வலர். நிறப்பிரிகை எனும் குறும்பத்திரிக்கையின் ஆசிரியர் ஆவார். நிறப்பிரிகை, 1990களில் தமிழ்நாட்டில் பல புதிய எழுத்தாளர்கள் உருவாவதற்கு காரணமாக இருந்ததது.[1] மேலும் இவர் ஒர் தமிழக அரசியல்வாதி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் ஆவார்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு | மூலத்தைத் தொகு]

நாகப்பட்டினம் மாவட்டத்தில் சீர்காழி வட்டத்தில் காவிரிக்கரை கிராமமான மாங்கணாம்பட்டில் 10-06-1961 இல் பிறந்தவர். பெற்றோர் : துரைசாமி- கனகம்மாள். மனைவி: செண்பகவல்லி, மகன்கள்: ஆதவன், அதீதன். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றவர்.

அரசியல் வாழ்க்கை[தொகு | மூலத்தைத் தொகு]

இவர் 2006 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், காட்டுமன்னார்கோயில் தொகுதியிலிருந்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்டியிட்டு, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][3]

பின்னர் 2019 ஆம் ஆண்டு நடந்த இந்திய மக்களவைத் தேர்தலில், விழுப்புரம் தொகுதியிலிருந்து, திராவிட முன்னேற்றக் கழக சார்பில் போட்டியிட்டு, இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[4][5]

எழுதிய நூல்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

கட்டுரைத் தொகுப்புகள்

  • கண்காணிப்பின் அரசியல் (1995) விடியல் பதிப்பகம்[6]
  • கொதிப்பு உயர்ந்து வரும் (2001) காலச்சுவடு பதிப்பகம்
  • கடக்க முடியாத நிழல் (2003) காலச்சுவடு பதிப்பகம்
  • மால்கம் எக்ஸ் (2003) காலச்சுவடு பதிப்பகம், உயிர்மை மறுபதிப்பு (2010)
  • வன்முறை ஜனநாயகம் (2004) தலித் வெளியீடு
  • சொன்னால் முடியும் (2007) விகடன் பதிப்பகம்
  • இன்றும் நமதே (2007) விகடன் பதிப்பகம்
  • தமிழராய் உணரும் தருணம் (2009) ஈழ விடுதலைப் போராட்டம் குறித்த கட்டுரைகளிந்தொகுப்பு. ஆழி பதிப்பகம்
  • துயரத்தின்மேல் படியும் துயரம் (2010) ஆழி பதிப்பகம்
  • காணமுடியாக் கனவு (2010) ஆழி பதிப்பகம்
  • சூலகம் ( 2009) பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்த கட்டுரைகள் உயிர்மை பதிப்பகம்
  • கற்றனைத்தூறும் (2009) கல்வி தொடர்பான கட்டுரைகள் , உயிர்மை பதிப்பகம்
  • பிறவழிப் பயணம் (2010) உயிர்மை பதிப்பகம்
  • பாப் மார்லி - இசைப் போராளி (2010) பாப் மார்லியின் வாழ்க்கை வரலாறு , உயிர்மை பதிப்பகம்
  • அண்டை அயல் உலகம் (2010) அண்டை நாடுகள் குறித்த கட்டுரைகள், உயிர்மை பதிப்பகம்
  • கடல்கொள்ளும் தமிழ்நாடு (2010) சூழலியல் கட்டுரைகள் , மணற்கேணி பதிப்பகம்
  • காற்றின் பதியம் (2010) மணற்கேணி பதிப்பகம்
  • எல்.இளையபெருமாள்- வாழ்வும் பணியும் (2010) மணற்கேணி பதிப்பகம்
  • சொல்லும் செயல் - ரவிக்குமார் சட்டமன்றத்தில் ஆற்றிய உரைகள் (2010) மணற்கேணி பதிப்பகம்

கவிதை

  • அவிழும் சொற்கள் (2009) உயிர்மை பதிப்பகம்
  • மழைமரம் (2010) க்ரியா பதிப்பகம்

பிற செயல்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

இரவிக்குமார், ஆனந்த் என்பவருடன் இணைந்து "நவயானா" என்ற சாதி-எதிர்ப்பு நூல்கள் வெளியிடுவதற்கான பதிப்பகத்தை நிறுவினார். மேலும் அவர் மக்கள் கல்வி இயக்கம் என்ற இயக்கத்தை ஆரம்பித்துள்ளார். 'தலித்' மற்றும் 'போதி' என்ற இரு தமிழ்ப் பத்திரிக்கைகளின் ஆசிரியராகவும் உள்ளார். தற்போது 'மணற்கேணி' என்ற மாதமிருமுறை வெளிவரும் ஆராய்ச்சிப் பத்திரிக்கையின் ஆசிரியராகவும் உள்ளார்.

'ஆக்சுபோர்ட் இந்தியா தமிழ் தலித்திய படைப்புகளின் தொகுப்பு' (2012) என்ற புத்தகத்தில் அழகரசனோடு ரவிக்குமார் இணையாசிரியராகப் பணியாற்றியுள்ளார். இந்தியன் எக்சுபிரசு நாளேட்டில் விமர்சகர் ஏ. எஸ். பன்னீர்செல்வன் இந்த புத்தகத்தைப் பற்றி இவ்வாறு குறிப்பிடுகிறார்:வார்ப்புரு:ஆதாரம்

"எழுதப்பட்ட விதம் அலாதியானது, ஆனால் இரண்டு குறிப்பிடப்படும்படியான குறைகள் இந்தத் தொகுப்பில் காணப்படுகின்றன.....ஒன்று, தமிழ் தலித்திய இலக்கியத்தின் குறிப்பிடப்படவேண்டிய சில முக்கியமான குரல்கள் விடுபட்டு போயிருக்கின்றன; இரண்டு, தமிழ் தலித்திய இலக்கியத்தின் வளர்ச்சியும், அது பேசும் அரசியலும் மிகவும் குறுகிய முறையில் பதியப்பட்டிருக்கின்றன. இது இந்தப் புத்தகத்தின் மையக் குறிக்கோளுக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் அமைந்திருக்கின்றது."

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. Satyanarayana and Tharu (2011). No Alphabet in Sight: New Dalit Writing from South India. New Delhi: Penguin India. பக். 258. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-143-41426-1. 
  2. Kolappan, B. (20 March 2012). "Tamil Dalit writing set to go English". The Hindu. http://www.thehindu.com/todays-paper/tp-miscellaneous/tp-others/tamil-dalit-writing-set-to-go-english/article3014460.ece. 
  3. Panneerselvan, A. S. (11 Aug 2012). "Out of the Book". The Indian Express. http://indianexpress.com/article/news-archive/web/out-of-the-book/. பார்த்த நாள்: 14 June 2015. 
  4. "தமிழ்நாடு தேர்தல் முடிவுகள் 2019 - 38 தொகுதிகள் வெற்றியாளர்களின் முழு பட்டியல்".<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>பிபிசி தமிழ் (மே 23, 2019)
  5. "திருமாவளவனின் ராஜதந்திரம் பலித்தது.. விசிக ரவிக்குமார் 1.28 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி".<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles> ஒன்இந்தியா (மே 23, 2019)
  6. தீராநதி (2006-10-27). "நவீன தமிழ் இலக்கிய எழுத்தாளர் ரவிக்குமார்". தமிழ் கூடல். Archived from the original on 2016-03-04. https://web.archive.org/web/20160304224846/http://www.koodal.com/article/tamil/ilakkiyam.asp?id=547. பார்த்த நாள்: 2014-06-11. "மணற்கேணிப் பதிப்பகத்தின் வெளியீடாக ‘அதிகாரத்திடம் உண்மையைப் பேசுதல்’, ‘உரையாடல் தொடர்கிறது’ ஆகிய இரண்டு நூல்கள் ரவிக்குமாரின் மொழிபெயர்ப்பில் வெளிவந்துள்ளன. ஏற்கனவே ‘பணிய மறுக்கும் பண்பாடு’ என்ற நூலிலும், வேறு சில இதழ்களிலும் கட்டுரைகளாக வந்தவைகள்தான் என்றாலும் இருத்தல் குறித்த தத்துவம் சார்ந்த மொழியாடல்கள் என்பதனால் மீண்டும் மீண்டும் வாசிப்பைக் கோரி நிற்கின்றன இந்த எழுத்துக்கள்." 

வார்ப்புரு:தமிழக மக்களவை உறுப்பினர்கள், பதினேழாவது மக்களவை