சு. வெங்கடேசன்
சு. வெங்கடேசன் | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை | |
பதவியில் உள்ளார் | |
பதவியேற்பு 18 ஜூன் 2019 | |
முன்னவர் | ஆர். கோபாலகிருஷ்ணன் |
தொகுதி | மதுரை |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | மார்ச்சு 16, 1970 ஹார்விப்பட்டி, மதுரை, தமிழ்நாடு வார்ப்புரு:நாட்டுத் தகவல் INDவார்ப்புரு:Namespace detect showall |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) |
வாழ்க்கை துணைவர்(கள்) | கமலா |
பிள்ளைகள் | யாழினி தமிழினி |
பெற்றோர் | சுப்புராம் நல்லம்மாள் |
இருப்பிடம் | 4, ஹார்விப்பட்டி மேற்கு தெரு, மதுரை, தமிழ்நாடு |
பணி | எழுத்தாளர், அரசியல்வாதி |
விருதுகள் | சாகித்திய அகாதமி விருது (2011) |
சு. வெங்கடேசன் தமிழகத்தின் மதுரையைச் சேர்ந்த ஒரு தமிழ் புதின எழுத்தாளரும், மதுரை நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் ஆவார். இவர் எழுதிய முதல் நூலான காவல் கோட்டம் என்ற வரலாற்றுப் புதின நூலுக்காக 2011-ஆம் ஆண்டுசாகித்திய அகாதமி விருது பெற்றார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தலைவராகவும் உள்ளார். தமிழ் திரைப்பட இயக்குநரான வசந்தபாலன் இயக்கத்தில் 2012-ஆம் ஆண்டில் வெளிவந்த அரவான் திரைப்படம் இவரின் காவல் கோட்டம் புதினத்தை அடிப்படைக் கதையாகக் கொண்டது.
வாழ்க்கைச் சுருக்கம்[தொகு | மூலத்தைத் தொகு]
மதுரை மாவட்டம் ஹார்விபட்டியில் சுப்புராம் மற்றும் நல்லம்மாள் தம்பதியினருக்குப் பிறந்தவர் சு.வெங்கடேசன். மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் பி.காம்., பட்டம் பெற்றார். கல்லூரி முதலாம் ஆண்டு படித்தபோது, 1989-இல் "ஓட்டை இல்லாத புல்லாங்குழல்' என்ற கவிதை நூல் இயற்றியுள்ளார்.
இவரின் படைப்புகள்[தொகு | மூலத்தைத் தொகு]
- ஓட்டை இல்லாத புல்லாங்குழல் (கவிதை) - 1989
- திசையெல்லாம் சூரியன் (கவிதை)
- பாசி வெளிச்சத்தில் (கவிதை)
- ஆதிப்புதிர் (கவிதை)
- கலாசாரத்தின் அரசியல் (கட்டுரை)
- மனிதர்கள், நாடுகள், உலகங்கள் (கட்டுரை)
- கருப்பன் கேட்கிறான் கிடாய் எங்கே? (சிறு நாவல்)
- சமயம் கடந்த தமிழ் (கட்டுரை)
- காவல் கோட்டம் (புதினம்)
- அலங்காரப்பிரியர்கள் (கட்டுரை)2014
- சந்திரஹாசம் (வரைகலைப் புதினம்)2015[1]
- வைகை நதி நாகரிகம் 2015-ஆம் ஆண்டில் ஆனந்தவிகடனில் வெளிவந்த தொடர்
- வீரயுக நாயகன் வேள்பாரி ஆனந்தவிகடனில் வெளிவந்த வரலாற்றுத் தொடர் (புதினம்) 2016
அரவான் திரைப்படம்[தொகு | மூலத்தைத் தொகு]
2011-ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்ட இவரது காவல் கோட்டம் நூல் தமிழ்த் திரைப்பட இயக்குநரான வசந்தபாலன் இயக்கத்தில் 2012-ஆம் ஆண்டில் வெளிவந்த அரவான் திரைப்படம் இப்புதினத்தை அடிப்படைக் கதையாகக் கொண்டது.
காவல் கோட்டம் பற்றி வெங்கடேசன் சொல்லியது:[2]
“ | வார்ப்புரு:Trim quotes | ” |
— தினமலர், டிசம்பர் 29, 2011 |
அரசியல் செயல்பாடுகள்[தொகு | மூலத்தைத் தொகு]
சு. வெங்கடேசன் தன் கல்லூரி மாணவப் பருவத்திலிருந்து மார்க்சிஸ்ட் பொதுவுடமைக் கட்சியின் முழுநேர ஊழியராகப் பணியாற்றி வந்துள்ளார். உத்தப்புரம் சாதி தடுப்புச் சுவர் இடிப்பு உள்ளிட்ட தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பல்வேறு களப் போராட்டங்களில் இவர் கலந்துகொண்டுள்ளார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மேடைகளில் கவிஞராக அறிமுகமாகிப் பின் அதன் மாநிலத் தலைவராக உயர்ந்தார்.[3] 2019-ஆம் ஆண்டு நடந்த இந்திய நாடாளுமன்றத் தேர்தலில், மதுரை தொகுதியிலிருந்து, மார்க்சிஸ்ட் பொதுவுடமைக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு,1.39 இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று,இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[4][5]
மதுரை மக்களவை உறுப்பினராகச் செயல்பாடுகள்[தொகு | மூலத்தைத் தொகு]
- மதுரையில் தேசிய மருந்துசார் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கழகம் அமைக்க வேண்டும் என்று மத்திய இரசாயனம்- உரத்துறை அமைச்சர் சதானந்த கவுடாவைச் சந்தித்து மனு அளித்ததுள்ளார் .[6]
- தமிழ் நாகரிகம் உருவான காலத்தைப் பள்ளி பாடப்புத்தகங்களில் கி.மு ஆறாம் நூற்றாண்டு என மாற்ற செய்திடவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.[7]
- மத்திய ரயில்வே துறை ஆலோசனைக்குழுவில் தமிழக எம்.பி.க்கள் மூன்று பேர் இடம்பெற்றுள்ளனர். 27 பேர் கொண்ட இந்த குழுவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன், திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பழனிமாணிக்கம், ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.[8]
இவற்றையும் பார்க்கவும்[தொகு | மூலத்தைத் தொகு]
மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]
- ↑ Vikatan. "Chandrahasam".<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
- ↑ மதுரை, மதுரை பதிப்பு (December 27, 2011). "மதுரைக்கு "முதல் மரியாதை':காவல்கோட்டம் புத்தகத்திற்குச் "சாகித்ய அகாடமி' விருதுபெற்ற மதுரையைச்சேர்ந்த வெங்கடேசன்". தினமலர் (மதுரை). http://www.dinamalar.com/News_Detail.asp?Id=374795.
- ↑ செல்வ புவியரசன் (2019 மார்ச் 19). "தேர்தல் களம் புகும் தமிழ் எழுத்தாளர்கள்!". கட்டுரை. இந்து தமிழ். 21 மார்ச் 2019 அன்று பார்க்கப்பட்டது. Check date values in:
|date=
(உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles> - ↑ "மதுரை:மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளர் சு.வெங்கடேசன் வெற்றி".<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles> தினத்தந்தி (மே 24, 2019)
- ↑ "தமிழ்நாடு தேர்தல் முடிவுகள் 2019 - 38 தொகுதிகள் வெற்றியாளர்களின் முழு பட்டியல்".<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles> பிபிசி தமிழ் (மே 23, 2019)
- ↑ தீக்கதிர் நாளிதழ் , 21 நவம்பர் 2019 , பக்கம் :8
- ↑ http://loksabhaph.nic.in/Debates/uncorrecteddebate.aspx, 17th Loksabha , November 21 , 2019 , 12-1 PM
- ↑ தீக்கதிர் நாளிதழ் , 23 நவம்பர் 2019 , பக்கம் :1
வெளி இணைப்புகள்[தொகு | மூலத்தைத் தொகு]
- காவல்கோட்டம் பற்றி ஜெயமோகன்
- வரலாற்றுநாவல் குறித்தும் காவல்கோட்டம் குறித்தும்
- சு.வெங்கடேசனுக்கு இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாதமி விருது
- களவியல் காரிகை - காவல் கோட்டத்துக்கு ஆ. இரா. வேங்கடாசலபதியின் முகவுரை பரணிடப்பட்டது 2012-01-08 at the வந்தவழி இயந்திரம்
- CS1 பிழைகள்: திகதிகள்
- Pages using infoboxes with thumbnail images
- Wikipedia pages using the awards parameter of Infobox officeholder
- Articles with attributed pull quotes
- Webarchive template wayback links
- மதுரை மக்கள்
- தமிழக எழுத்தாளர்கள்
- தமிழக அரசியல்வாதிகள்
- வாழும் நபர்கள்
- 17வது மக்களவை உறுப்பினர்கள்
- நாடாளுமன்ற இந்திய மார்ச்சிய பொதுவுடைமைக் கட்சி உறுப்பினர்கள்
- தமிழ்நாட்டைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர்கள்